கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை சமீபத்தில் தமிழக முதல்வர் திரு. மு க ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். 1 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 1000 வழங்கும் இந்த திட்டத்தில் சுமார் 57 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதனை அறிந்த தமிழக அரசு தகுதி உள்ள எந்த ஒரு குடும்ப தலைவிக்கும் இந்த திட்டத்திற்கான பலன்கள் கிடைக்காமல் இருக்க கூடாது என எண்ணியது.
Enewz Tamil WhatsApp Channel
இதையடுத்து, இ சேவை மையங்கள் மூலம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை மகளிர் அறியும் படி, குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு 30 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யும் வகைகளில் அரசு சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. இதன் தொடர்ச்சியாக தற்போது, மேல்முறையீடு செய்யப்பட்ட விண்ணப்பங்களை கள ஆய்வு நடத்தி மறுபரிசீலனை செய்ய மண்டல வாரியாக முகாம்கள் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.