இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, சூரியனை ஆய்வு செய்வதற்காக “ஆதித்யா எல்1” விண்கலத்தை “PSLV C 57” ராக்கெட்டுடன் இணைத்து இன்று (செப்டம்பர் 2) வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இதற்கு பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வரவேற்பு தெரிவித்து வரும் நிலையில், இத்திட்டம் காங்கிரஸ் ஆட்சியில் திட்டமிட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இது தொடர்பாக அவர் கூறியதாவது, “சூரியனை ஆய்வு செய்ய 2006ஆம் ஆண்டு தொடக்கத்திலே திட்டமிடப்பட்டது. இதற்கான ஒப்புதல் 2008ஆம் ஆண்டு இஸ்ரோவுக்கு வழங்கப்பட்டதை தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு “ஆதித்யா 1” விண்கலம் என பெயரிடப்பட்டு தொடங்கியது. தற்போது “ஆதித்யா எல்-1 ” என பெயர் மாற்றம் செய்யப்பட்டு விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டு உள்ளது.” என தெரிவித்துள்ளார்.
ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம்.., அமல்படுத்துவதில் இப்படி ஒரு சிக்கலா?? வெளியான முக்கிய தகவல்!!!