தமிழக சுகாதாரத்தறை செயலர் ராதாகிருஷ்ணனின் மனைவி மகன் உட்பட அவரது குடும்பத்தை சேர்ந்த நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று உறுதி..!
தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கொரோனா தடுப்பு பணிகளில் மும்முரமாக பணியாற்றி வரும் அவர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக செல்வதால் வீட்டிற்கு போகாமல் அரசினர் விடுதியில் தங்கியுள்ளார்.
ராஜீவ் காந்தி படுகொலை – கைதி நளினி சிறையில் தற்கொலை முயற்சி!!
இந்நிலையில் மதுரையில் இருந்து அவரது மாமனார் மற்றும் மாமியார் சென்னை வந்ததை அடுத்து அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. அவர்களுடன் தொடர்பில் இருந்த ராதாகிருஷ்ணனின் மனைவி, மகனுக்கு பரிசோதனை நடந்ததில் தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் நால்வரும் சென்னை கிங்ஸ் ஆய்வு மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். செயலர் ராதாகிருஷ்ணனுக்கும் பரிசோதனை நடந்ததில் அவருக்கு தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதியானது.