அரசு ஊழியர்கள் பயன்பெறும் வகையில் பல திட்டங்களையும், சலுகைகளையும் மத்திய, மாநில அரசு அறிவித்து வருகிறது. சமீபத்தில் கூட தமிழ்நாடு, உத்திரபிரதேச மாநில அரசு அகவிலைப்படியை உயர்த்தி வழங்கியது. இதை தொடர்ந்து தற்போது ராஜஸ்தான் மாநில முதல்வர் மற்றொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அந்த அறிவிப்பில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வருவதற்கு முன் பணத்தேவை ஏற்பட்டால் சம்பள தொகையில் இருந்து முன்பணம் பெற்று கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக அரசு ஊழியர் ஒருவருக்கு சம்பளம் ரூ.50,000 எனில் அதில் அவர்கள் தேவைக்கேற்ப 10000 முன்பணம் வழங்கப்பட்டால், மீதமுள்ள 40,000 சம்பளம் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
இதை தொடர்ந்து விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் அரசு ஊழியர்கள் ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அவர்களுக்கு சம்பளம் உயர்த்தி வழங்கப்படும். இது தவிர பதக்கம் வென்ற விளையாட்டு அரசு ஊழியர்களுக்கு அரசு நிர்ணயிக்கப்பட்ட சம்பளம் வழங்கப்படும் என ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.