இன்றைய காலகட்டத்தில் மின்சாரத்தின் தேவையானது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. இதனால், மக்களின் நலனை கருத்தில் கொண்டே தமிழக அரசு மக்களுக்கு 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாக வழங்கி வருகிறது. இதனை தொடர்ந்து, ராஜஸ்தான் அரசும் பொது மக்களுக்கு 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாக வழங்க உள்ளதாக சமீபத்தில் அறிவித்துள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்நிலையில், கேரள அரசு மின் கட்டண ரூபாயை யூனிட்டுக்கு பைசா கணக்கில் அதிகரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. அதாவது, ஜூன் 1ம் தேதி முதல் எரிபொருளுக்கு கூடுதல் கட்டணமாக 10 பைசாவும், ஒழுங்குமுறை ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட 9 பைசாவும் என மின் கட்டணம் யூனிட்டுக்கு 19 பைசா உயரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், சராசரியாக ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை ரூ. 6.29 முதல் ரூ. 6.48 ஆக உயர்ந்துள்ளது. இதனால், ஜூன் மாத இறுதிக்குள் யூனிட்டுக்கு 40 பைசா வரை உயரவும் வாய்ப்பு உள்ளதாக கேரளா மின்வாரிய துறையில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.