தமிழக அரசு விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன், இலவச மின் இணைப்பு, கடன் தள்ளுபடி போன்ற பல திட்டங்களையும், சலுகைகளையும் அறிவித்து வருகிறது. இது தவிர தமிழகம் முழுவதும் விவசாயிகள் விளைவிக்கும் நெல்லை நேரடியாக நெல் கொள்முதல் நிலையங்கள் கொள்முதல் செய்து அவர்களுக்கு உடனடியாக பணம் கிடைக்கும் படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது தமிழ்நாடு முழுவதும் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் இன்று முதல் பயோமெட்ரிக் முறையில் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படும் என்றும், இந்த திட்டத்தின் மூலம் வியாபாரிகள் நெல்லை கொள்முதல் நிலையங்களில் விற்பதை தடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர்.
மக்களே உஷார்…, ஜூன் 1(இன்று) முதல் மின் கட்டணம் உயர்வு…, வெளியான அதிர்ச்சி தகவல்!!
மேலும் இந்த திட்டத்தால் தமிழக விவசாயிகள் அதிக அளவில் பயன் பெறுவார்கள் என்றும் கூறியுள்ளனர். இது தவிர கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கூடுதலாக பணம் வசூலித்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.