மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரைப்படி, ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டு 42 சதவீதமாக தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மீண்டும் ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு 4 சதவீதம் அதிகரிக்கும் என தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
மேலும் மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய அளவில் சம்பள உயர்வு கிடைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். அதாவது கடந்த 2016ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட 7வது ஊதியக்குழு பரிந்துரை படி அகவிலைப்படி 50 சதவீதமாக உயரும் பட்சத்தில் அது பூஜ்ஜியமாக்கப்பட்டு, அந்த தொகை ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஜூலை மாதத்தில் 46 சதவீதமாக அகவிலைப்படி உயர்ந்தால், 2024 ஜனவரியில் மீண்டும் 4 சதவீதம் உயர வாய்ப்புள்ளது.
இதன்படி அகவிலைப்படி 50 சதவீதமாக உயர்த்தப்படும் பட்சத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய அளவில் ஊதிய உயர்வு இருக்கும் என பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். உதாரணமாக ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ.18,000 எனில், 50 சதவீத அகவிலைப்படி ரூ.9,000 சேர்த்து ரூ.27,000ஆக மாதாந்திர ஊதியம் ஏற்றம் காணும். இதன் காரணமாக மத்திய அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.