CSK அணியின் கேப்டன் தோனி IPL தொடருக்கான இறுதிப் போட்டியில் விளையாடுவது சந்தேகமான ஒன்று தான் என தகவல் வெளியாகியுள்ளது.
தோனி
கடந்த ஆண்டு IPL தொடரில் பிளே ஆப் சுற்று கூட செல்லாமல் வெளியேறிய CSK அணி இந்த ஆண்டு இறுதிப் போட்டிக்குள் நுழைந்து உள்ளது. இந்த அணி பிளே சுற்றுக்கான இறுதி ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதி வெற்றி பெற்று நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது. இந்த அணியுடன் போட்டியிட நாளை நடைபெற இருக்கும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் அணிக்கு எதிரான பிளே ஆப் போட்டியில் வெற்றி பெறும் அணி மோத உள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த அணிகளில் யார் இந்த ஆண்டுக்கான IPL பட்டத்தை தட்டிச் செல்லப் போகிறார்கள் என்று தெரியவில்லை. இந்நிலையில் CSK அணி குறித்து ஒரு தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அதாவது குஜராத்துக்கு எதிரான முதல் பிளே ஆப் போட்டியில் தோனி பதினாராவுக்கு ஆதரவாக நடுவர்களுடன் பேசி நேரத்தை கடத்தியதாக சொல்லப்படுகிறது.
மீண்டும் உலக சாதனை படைத்த முதல் இந்திய வீரர் “விராட் கோஹ்லி”., ரசிகர்கள் கொண்டாட்டம்!!!
இந்த செயலுக்கு இப்போது நடவடிக்கை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. அப்படி ஒரு வேளை நடவடிக்கை எடுத்தால் தோனி இறுதிப் போட்டியில் விளையாடுவது கேள்விக்குறி தான் என்று சொல்லப்படுகிறது. இதை அறிந்த ரசிகர்கள் தோனி இல்லை என்றால் இந்த ஆண்டும் ஐபிஎல் கோப்பை பறிபோகும் என்ற அச்சத்தில் உள்ளனர்.