இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளின் இரண்டாவது பிளே ஆப் சுற்று இன்று (மே 24) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொண்டுள்ளது. இன்றைய போட்டி இரண்டு அணிகளுக்கும் முக்கியமான போட்டி என்பதால் மைதானத்தில் அதிரடிக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில், தற்போது துவங்கியுள்ள போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் களத்தில் இருக்கும் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் இஷான் கிஷான் இருவரும் சேர்ந்து 3 ஓவர் முடிவில் 30 ரன்களை எடுத்து கன்சிஸ்டன் ஆக விளையாடி வருகின்றனர்.
தனுஷுக்கு பிடிச்சாலும், அது ரஜினி sir கையில தான் இருக்கு., உண்மையை உடைத்த வெற்றிமாறன்!!
இந்த போட்டியில், வெற்றி பெறும் அணி அடுத்ததாக நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் குஜராத் அணி உடன் மோத வேண்டும். இதற்கிடையில், நேற்று நடைபெற்ற முதல் குவாலிபையர் போட்டியில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு தகுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.