தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரிய பெரும்பாலனோர் உடல் ரீதியாகவும், தேர்வு ரீதியாகவும் தயாராகி வருகின்றனர். இதற்கேற்ப 2ம் நிலை காவலர் பிரிவில் ஆண்கள் 1,819 பேரும், பெண்கள் 780 பேரும் என 2,599 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதேபோல் கடந்தாண்டில் 2ம் நிலை காவலர் பிரிவில் 3,271 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது. இதன் எழுத்துத் தேர்வு நவம்பர் மாதம் நடத்தப்பட்டதில் டிசம்பரில் முடிவுகள் வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து உடல் தகுதி தேர்வு பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இதன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் வழங்கி உள்ளார்.
இதைத்தொடர்ந்து ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ரூ.36.39 கோடியில் காவல் அலுவலக கட்டடங்களையும் திறந்து வைத்துள்ளார்.