தமிழகத்தில் கடந்த மாதம் 10 ஆம், 11 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இதில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.94% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதே போன்று 10 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வில் 91.39% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்நிலையில் 10 ஆம், 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு துணைத் தேர்வு பற்றி அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது 10 ஆம், 11 ஆம் வகுப்பு துணைத் தேர்விற்கு மே 23 ஆம் தேதி முதல் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
தமிழகத்தில் 2ம் நிலை காவலர் பதவிகளில் 3,271 பேருக்கு பணி நியமனம்., முக்கிய அறிவிப்பு!!!
இதில் 10ம் வகுப்புக்கான துணைத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால் 27 ஆம் தேதி தமிழ், 28 ஆம் தேதி ஆங்கிலம், 30 ஆம் தேதி கணிதம், 1 ஆம் தேதி பிறமொழி, 3 ஆம் தேதி அறிவியல், 4 ஆம் தேதி சமூக அறிவியல் தேர்வும் நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும்.