பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோட்டில் மூர்த்தி, தனம் இருவரும் வீட்டை விட்டு கிளம்ப அவர்களை வெளியே விடாமல் கதிர், முல்லை தடுக்கின்றனர். அந்த நேரத்தில் முல்லையின் அம்மா அவங்கள போக வேண்டியது தானே என சொல்கிறார். பின் இருவரும் அந்த வீட்டை விட்டு கிளம்ப கூடாது என்று சத்தியம் வாங்குகின்றனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இது பார்வதிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இதனால் முல்லையும், கதிரும் பார்வதியை சத்தம் போடுகின்றன. கடைசியில் முல்லை தன் அம்மா என்று கூட பார்க்காமல் அவரை வீட்டை விட்டு துரத்துகிறார். அந்த கோபத்தில் பார்வதி தனத்திடம் கத்துகிறார். இதனால் மீண்டும் முல்லை பார்வதியிடம் சண்டை போட, கதிரும் வீட்டை விட்டு துரத்துகிறார்.
பின் கதிரிடம் தனம் ஏன் இப்படி செஞ்சீங்க என்று கேட்க அவரை முல்லை சமாதானப்படுத்துகிறார். அடுத்ததாக எல்லோரும் பார்வதி பேசியதை நினைத்து வருத்தப்படுகின்றனர். இந்த பக்கம் ஐஸ்வர்யா, கண்ணனை பார்க்க கஸ்தூரி வீட்டுக்கு வருகிறார். அப்போது வழக்கம் போல் கண்ணனை அவர் கிண்டல் செய்கிறார். அப்போது ஐஸ்வர்யா கஸ்தூரியிடம் ஜாலியாக பேசி பணம் கேட்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.