தமிழகத்தில் கோடை வெயில் அதிகரித்து வருவதால் Fan, A/C உள்ளிட்ட மின் சாதனங்கள் இல்லாமல் இருக்கவே முடியாது என்ற சூழ்நிலை உருவாகி வருகிறது. ஆனாலும் மின்வாரிய நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக மாதம் ஒரு முறை மின் தடை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அதன்படி சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திருப்புவனம், லாடனேந்தல், திருப்பாச்சேத்தி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
அரசு பணி வழங்க கோரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்…, நியமனத் தேர்வு ரத்து செய்யப்படுமா??
இதேபோல் திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை பூலாங்கிணறு துணை மின் நிலையத்திற்குட்பட்ட அந்தியூர், பாப்பனூத்து, வாளவாடி, குறிச்சிக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இதுபோக பொள்ளாச்சி வட்டத்தில் உள்ள அங்கலக்குறிச்சி துணை மின் நிலையங்களிலும் பராமரிப்பு பணி நடைபெறுவதால் குப்புச்சிபுதூர், ஜெ.ஜெ.நகர், பாறைபதி உள்ளிட்ட இதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்த உள்ளனர்.