தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இடியுடன் கூடிய மழை பெய்து குளிர்வித்து வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் நீர் நிலைகள் நிரம்பியதால் சுற்றுலா செல்பவர்கள் சுவாரஸ்யமாக ரசித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் மே 1 முதல் இன்று (மே 8) வரை மழைப்பதிவு குறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அதன்படி இயல்பு அளவான 8 செ.மீ.க்கு பதிலாக 16.5 செ.மீ. வரை பெய்துள்ளது. சென்னையை பொறுத்தவரை 3 செ.மீ. பதிலாக 10 செ.மீ. வரை மழை பதிவாகியுள்ளது. இதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் 114 சதவீதம் மழைப்பொழிவு இயல்பை விட அதிகமாக பதிவாகியுள்ளது. இந்த அளவு சென்னையில் மட்டும் 281 சதவீதமாகும்.
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி.., மழை பெய்ய வாய்ப்பு.., எச்சரிக்கும் வானிலை மையம்!!!
இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் “மோச்சா” என்ற புயல் உருவாக உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். எனவே இனி வரும் காலங்களில் மழை பதிவு இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.