தென்கிழக்கு வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை அறிக்கை
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக மழை கொட்டி தீர்த்து வந்த நிலையில் நேற்று மழை இன்றி காணப்பட்டது. இந்நிலையில் இன்று வெளியான வானிலை அறிக்கையில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதனால் இன்று தமிழகம் மற்றும் புதுவை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் லேசானது முதல் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு அதிக வாய்ப்புள்ளது. இதை தொடர்ந்து தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம், கள்ளக்குறிச்சி, ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி.
மக்களே தயாராகுங்க.., நாளை இந்தெந்த பகுதிகளுக்கு மின்தடை – அறிவிப்பு வெளியீடு!!
பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு அதிக வாய்ப்புள்ளதால் கடலோர பகுதிகளில் உள்ள மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.