தமிழகத்தில் சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 408 ரூபாய் குறைந்து உள்ளதால், நகை வாங்கச் சென்ற மக்கள் சற்று நிம்மதி அடைந்து உள்ளனர்.
இன்றைய விலை நிலவரம்:
தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக ஆபரணங்கள் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு நகை வியாபாரம் தொடங்கி உள்ளது. இதனால் அதன் தேவை அதிகரித்து விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே சென்று புதிய உச்சத்தை எட்டியது.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு ‘பணமில்லா சிகிச்சை’ – மத்திய அரசின் அசத்தல் திட்டம்!!
இந்நிலையில் இன்று ஆபரணத் தங்கத்தின் (22 காரட்) விலை கிராமுக்கு 51 ரூபாயும், சவரனுக்கு 408 ரூபாயும் குறைந்து உள்ளது. வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 1.30 ரூபாய் குறைந்து உள்ளது.
- ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை – ரூ. 4,633
- ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை – ரூ. 37,064
- ஒரு கிராம் வெள்ளியின் விலை – ரூ. 53.40
- ஒரு கிலோ வெள்ளியின் விலை – ரூ. 53,400