ஜூலை மாதத்தின் ஞாயிற்றுக் கிழமைகளில் டாஸ்மாக் கடைகள் இயங்காது – தமிழக அரசு உத்தரவு..!

0

ஜூலை மாதத்தின் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு என்பதால் அன்றைய தினங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் தகவல் அறிவித்துள்ளது.

6ம் கட்ட ஊரடங்கு..!

தமிழகத்தில் வருகின்ற ஜூலை மாதம் 31ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். 6வது கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள், கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு செய்யப்படுவதாக தமிழக அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜூலை மாதத்தின் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு என்பதால் மெடிக்கல் கடைகள் மற்றும் ஆம்புலன்ஸ் சேவைகள் தவிர அனைத்து கடைகள் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு உத்தரவை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

டாஸ்மாக் கடைகள் இயங்காது..!

இதனையடுத்து ஜூலை மாதத்தின் ஞாயிற்றுக் கிழமைகளில் அதாவது 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் முழு ஊரடங்கு என்பதால் அன்றைய தினங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் தகவல் அறிவித்துள்ளது.

மேலும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களில் ஜூலை 5ம் தேதி வரை இலவசமாக உணவு வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here