புத்த பூர்ணிமா தினத்தை பொது விடுமுறை நாளாக அறிவிக்க கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
புத்த பூர்ணிமா:
ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் பவுர்ணமி அன்று புத்த பூர்ணிமா இந்தியா, இலங்கை, இந்தோனேசியா,நேபாளம் ஆகிய நாடுகளில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு மே மாதம் 17ம் தேதி புத்த பூர்ணிமா விழா கொண்டாடப்பட உள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதனால் இந்த நாளை இந்தியாவில் பொது விடுமுறையாக அறிவிக்க கோரி, விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த பாண்டியராஜ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் புத்த பூர்ணிமா தினத்தை பொது விடுமுறையாக அறிவிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
ஐயோ கீர்த்திக்கு என்னாச்சு.., பித்துபிடித்தது போல ஓடிய வீடியோ.., ரசிகர்கள் ஷாக்!!
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி டி. ராஜா, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலங்களுக்கு பொது விடுமுறை வழங்குவது சாத்தியமற்றது என கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.