கோவில்பட்டி அருகே எட்டயபுரத்தில் காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் இளைஞர் ஒருவர் இறந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூக்கிட்டு தற்கொலை..!
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் மேலைய தெருவை சேர்ந்த கணேசமூர்த்தி வயது 29 என்பவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 20ம் தேதி எட்டயபுரம் புறவழிசாலையில் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது அந்த வழியில் சோதனையில் ஈடுபட்டிருந்த 4 காவலர்கள் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
பின்னர் வீட்டுக்கு வந்த கணேசமூர்த்தி தொடர்ந்து இரண்டு நாட்களாக மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து அவரது மனைவி மற்றும் பெற்றோரிடம் இதுகுறித்து கூறியுள்ளார். நேற்று இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
நீதி கிடைக்க வேண்டும்..!
கணேசமூர்த்தியின் உடல் எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலை உறவினர்கள் வாங்க மறுப்பு தெரிவித்துள்ளனர். கணேசமூர்த்தியின் மரணத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்பதோடு தாக்குதல் நடத்திய காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஏற்கனவே சாத்தான்குளம் காவலர்கள் தாக்கியதில் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் உயிரிழந்தனர். ராஜாசிங் என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் அதிர்ச்சி அடங்குவதற்குள் எட்டயபுரத்தில் காவலர்கள் தாக்கியதில் இளைஞர் உயிரிழந்தது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.