தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை ஜோதிகா. தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி ஹிந்தி படங்களில் மும்மரமாக இருந்து வரும் நிலையில், சமீபத்தில் அவரின் குழந்தைகளுக்காக மும்பையில் செட்டில் ஆக போகிறார்கள் என்று தகவல் வெளியாகின.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்த நிலையில் விஜயின் ஒரு படத்தில் கமிட்டாகி ஷூட்டிங் வரை சென்று, அவரிடம் சொல்லாமல் கிளம்பியதாக இணையத்தில் ஒரு தகவல் தீயாய் பரவி வருகிறது. அதாவது நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2017 ம் ஆண்டு வெளியான மெர்சல் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் அதிகம் பேசப்பட்ட கதாபாத்திரம் என்றால் அது வெற்றிமாறன் தான்.
அவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருந்தார். ஆனால் அந்த கேரக்டரில் முதலில் நடிகை ஜோதிகா தான் நடித்தார். ஷூட்டிங் ஸ்பாட்டில் கதையை மாற்ற சொல்லி ஜோதிகா சொல்லியிருக்கிறார். அதற்கு அட்லீ மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கோபமான ஜோதிகா இதெல்லாம் சரிப்பட்டு வராது என்று படப்பிடிப்பில் இருந்து விஜயிடம் சொல்லாமலேயே கிளப்பியுள்ளார்.
இப்படி நீண்ட வருடங்களுக்கு பிறகு விஜய்யுடன் ஜோதிகா நடிக்க இருந்த நிலையில் அவர் பாதியிலே சென்றது தளபதிக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது.