தென்னிந்திய தமிழ் சினிமாவில் தலை சிறந்த நடிகர்களில் டாப்பில் இருப்பவர் தான் நடிகர் விஜய். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் விஜய், சங்கீதாவை விவாகரத்து செய்து விட்டார் என்ற செய்தி இணையத்தில் வைரலாகி வந்தது. ஆனால் நாளடைவில் அது பொய்யான தகவல் என்று தெரிய வந்தது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதுமட்டுமின்றி கீர்த்தி சுரேஷ்க்கு விலை உயர்ந்த கார் ஒன்றை விஜய் வாங்கி தந்ததாகவும், அது அவருடைய மனைவி சங்கீதாவுக்கும் தெரியும் என்ற செய்தி கூட சோசியல் மீடியாவில் தீயாக பரவியது. இதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் விஜய்யின் உணவு பழக்கத்தை குறித்து அவருடைய மனைவி பேசியது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
EPFO பயனர்களே.., உங்களுக்கான முக்கிய அறிவிப்பு.., வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.15% ஆக உயர்வு!!!!
அதாவது அவர் பேசியதாவது, அவருக்கு இட்லியை விட தோசைனா ரொம்ப விரும்பி சாப்பிடுவார். அதைவிட பிரியாணினா நல்லா இறங்கும். நாளைக்கு மதிய உணவுக்கு பிரியாணி சமைக்க போறேன் என்றால் இன்று இரவிலிருந்தே வயிறை காய போட்டுவிடுவார். அந்த அளவுக்கு அவருக்கு பிரியாணினா பிடிக்கும் என்று கூறியுள்ளார். தற்போது அவர் பேசியது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.