நடிகை பிரியா பவானி சங்கர் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் சினிமாவில் இருக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை குறித்து பேசியுள்ளார்.
ப்ரியா பவானி சங்கர்:
தமிழ் சினிமாவில் முக்கிய பிரபலமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர். ஆரம்பத்தில் செய்தியாளராக கேரியரை தொடங்கி அதன் மூலம் சீரியலில் என்ட்ரி கொடுத்து, தற்போது வெள்ளித்திரையில் கலக்கி வருகிறார். இதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி, பிசியாக நடித்து வருகிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் நடிக்க தொடங்கியுள்ளார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இப்படி சினிமாவில் பிசியாக வலம் வந்தாலும் தொடர்ந்து சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அதுமட்டுமின்றி லேட்டஸ்டாக எடுக்கும் புகைப்படங்களை தனது இணையதள பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் சினிமாவில் நடிகைகள் அனுபவிக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை குறித்து பேசியுள்ளார். அதாவது அவர் பேசியதாவது, தமிழ் சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இல்லை என்று சொல்லமாட்டேன். கண்டிப்பாக இருக்கிறது.
அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய ஜோடி…, சுவிஸ் ஓபனில் அடுத்தடுத்த செட்டுகளை கைப்பற்றி அபாரம்!!
ஆனால் அது மாதிரியான பிரச்சனை எதுவும் எனக்கு நடந்தது இல்லை. நான் சினிமாவில் நுழைந்ததில் இருந்து எனக்கு ஏகப்பட்ட நண்பர்கள் இருக்கிறார்கள். அப்படி அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லி யாரும் என்னிடம் கேட்டது இல்லை என்று ஓப்பனாக பேசினார். அவர் பேசியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.