அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய ஜோடி…, சுவிஸ் ஓபனில் அடுத்தடுத்த செட்டுகளை கைப்பற்றி அபாரம்!!

0
அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய ஜோடி..., சுவிஸ் ஓபனில் அடுத்தடுத்த செட்டுகளை கைப்பற்றி அபாரம்!!
அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய ஜோடி..., சுவிஸ் ஓபனில் அடுத்தடுத்த செட்டுகளை கைப்பற்றி அபாரம்!!

சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் தொடரில், ஆடவருக்கான இரட்டையர் பிரிவில், இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி டென்மார்க் வீரர்களை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி உள்ளனர்.

சுவிஸ் ஓபன் பேட்மிண்டன்:

சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் தொடர் கடந்த 21ம் தேதி முதல் பல்வேறு நாடுகளுக்கு இடையே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், இந்தியா சார்பாக ஆடவர் மற்றும் மகளிருக்கான ஒற்றையர், இரட்டையர் உள்ளிட்ட அனைத்து பிரிவிலும் வீரர்கள் பங்கு பெற்று விளையாடினர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதில், ஆடவருக்கான இரட்டையர் பிரிவில் பங்குபெற்ற சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி மட்டும் காலிறுதி வரை முன்னேறி இருந்தனர். இன்று நடைபெற்ற இந்த காலிறுதிப் போட்டியில், டென்மார்க்கின் ஜெப்பே பே மற்றும் லாஸ்ஸே மோல்ஹெட் ஜோடியை எதிர்த்து போட்டியிட்டனர். இதில், தனது முதல் செட்டை 15-21 என்ற புள்ளி கணக்கில் இந்திய ஜோடி இழந்தது.

விமானத்தில் பறந்த “தி எலிஃபென்ட் விஸ்பரர்ஸ்” புகழ் தம்பதி..,பலத்த வரவேற்பு கொடுத்த பயணிகள்.., நெகிழ்ச்சியான சம்பவம்!!

இதையடுத்து, தொடங்கப்பட்ட 2வது செட்டில் வேகம் காட்டிய இந்திய ஜோடி, 21-11 என விரைவில் கைப்பற்றியது. இதனை தொடர்ந்து, வெற்றியாளரை தீர்மானிக்கும் 3 வது செட்டில், 21-14 என்ற புள்ளிக் கணக்கில் இந்திய ஜோடி, வெற்றி பெற்றது. இதன் மூலம், காலிறுதியை 2-1 என்ற செட் கணக்கில் வென்ற சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது. இன்று இரவு நடைபெற இருக்கும் இந்த அரையிறுதிப் போட்டியில், மலேசியா வீரர்களுக்கு எதிராக இந்திய ஜோடி மோத உள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here