சாத்தான்குளத்தில் விசாரணை கைதியாக இருந்த தந்தை, மகனுக்கு நடைபெற்ற கொடூர சம்பவத்துக்கு எதிராக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் ட்வீட் செய்துள்ளார்.
தந்தை , மகன் இறப்பு விவகாரம்..!
கடந்த 19 தேதி ஊரடங்கு நேரத்தில் கடையை திறந்து வைத்ததாக கூறி ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னீக்ஸ் இருவரையும் விசாரணைக்கு அழைத்து சென்று பின்னர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் திடீரென அடுத்தடுத்து இருவரும் உயிரிழந்தனர்.
இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விசாரணை கைதிகள் உயிரிழப்பில் முறையான விசாரணை நடந்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடு வருகின்றனர்.
ஷிகர் தவான் ட்வீட்..!
இசசம்பவம் தொடர்பாக இந்திய கிரிக்கெட் வீரர் தமிழ்நாட்டில் ஜெயராஜ் & பென்னிக்ஸ் மீது சுமத்தப்பட்ட கொடூரத்தைப் பற்றி கேட்டு வேதனை அடைந்தேன். இந்த கொடூர செயலுக்கு எதிராக நாம் அனைவரும் குரல் எழுப்ப வேண்டும் என்றும் இறந்தவர்கள் குடும்பத்திற்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் ட்வீட் செய்துள்ளார்.
Horrified to hear about the brutality inflicted upon Jeyaraj & Fenix in Tamil Nadu. We must raise our voice and make sure justice is given to the family. ? #JusticeForJeyarajAndFenix
— Shikhar Dhawan (@SDhawan25) June 26, 2020