மகாாரஷ்டிராவில் இந்த ஆண்டு கல்லூரி இறுதித் தேர்வுகள் நடத்தாமல் மாணவர்களுக்கு பட்டம் வழங்க பரிந்துரைத்துள்ளதாக அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.
முதல்வர் உத்தவ் தாக்கரே..!
இதுகுறித்து அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே கூறுகையில், மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருப்பதால் இந்த ஆண்டுக்கான கல்லூரி இறுதித் தேர்வுகள் நடத்த வாய்ப்பில்லை எனவும் கலை மற்றும் அறிவியல் வகுப்புகளுக்கு மட்டுமின்றி மருத்துவம் உட்பட புரபஷனல் வகுப்புகளுக்கும் இதே நிலைமை தான் என்று கூறியுள்ளார்.
எனவே இறுதித் தேர்வுகள் நடத்தாமலேயே மாணவர்களுக்கு முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் பட்டம் வழங்க பரிந்துரைத்துள்ளதாகவும் இதற்காக செயல் திட்டத்தை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்கள் மேற்கொள்ளும் எனவும் அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.