தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தி உள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்து உள்ளார். மேலும் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவில் வழங்கப்பட்டு உள்ள தளர்வுகளை கடுமையாக்குவது தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார்.
தமிழக முதல்வர் அறிவிப்புகள்:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமடைந்து உள்ளதை தொடர்ந்து பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்துவது தொடர்பாக இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். பிறகு உரையாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். தமிழகத்தில் 75,000 படுக்கை வசதிகள் உருவாக்கப்பட்டு உள்ளதாகவும், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக முதல்வர் கூறினார்.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகள் ரத்து – யுஜிசி குழு பரிந்துரை..!
சென்னை முழுவதும் காய்ச்சல் முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு, 6 அமைச்சர்கள் 15 மண்டலங்களில் தொற்று பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக முதல்வர் கூறியுள்ளார். மேலும், தமிழகம் முழுவதும் ஜூன் 30 வரை மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஒரு மாவட்டம் விட்டு வேறொரு மாவட்டம் செல்ல கட்டாயம் இபாஸ் அவசியம் என முதல்வர் கூறியுள்ளார். முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள மதுரை மாவட்டத்திலும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்து உள்ளார்.