7வது ஊதியக்குழு பரிந்துரையின்படி, அரசு ஊழியர்களுக்கு இன்று டிஏ உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிஏ உயர்வு :
அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், கடந்த தீபாவளி பண்டிகையின் போது, அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 34 ல் இருந்து 38 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து 7 வது ஊதியக்குழு பரிந்துரையின்படி, அரசு ஊழியர்களுக்கான சம்பளம் மேலும் 4% உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதனால் அரசு ஊழியர்களிடையே, 42% வரை உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த ஜாக்பாட் அறிவிப்பு, ஹோலி பண்டிகையை முன்னிட்டு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது.
இந்த டிஏ உயர்வு காரணமாக, ஊழியர்களின் மாத சம்பளம் ரூபாய் 720 லிருந்து 2,276 ஆக உயர வாய்ப்புள்ளது. இதே தொகையை ஆண்டுக்கு கணக்கிடும்போது, ரூபாய் 18,000லிருந்து 27,000 வரை உயரும் என சொல்லப்படுகிறது. இதையடுத்து, இது சார்ந்த எதிர்பார்ப்புகள் ஊழியர்களிடையே தொடர்ந்து எழுந்து வருகிறது.