தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் இணைப்பில் பல்வேறு குளறுபடிகள் நடந்திருப்பதாகவும், மின் கட்டணம் குறித்து வதந்தி பரவி வருவதாகவும் மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மின்வாரியம் ஷாக் :
தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என, கடந்தாண்டு தமிழக அரசு வலியுறுத்தியது. இதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இந்தப் பணியை முடிக்காதவர்கள் இந்த மாதம் மின் கட்டணம் செலுத்த முடியாது என அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது. இது ஒரு புறம் இருக்க, தற்போது இந்த மின் இணைப்பில் பல்வேறு குளறுபடிகள் நடந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அதாவது, இந்த இணைப்பு அதிக அளவில் நடந்திருப்பதாக கணக்கு காட்டுவதற்காக வீட்டின் உரிமையாளர், குத்தகைதாரர் மற்றும் இணை உரிமையாளர்களுக்கு தெரியாமல் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதாகவும், வீட்டு உரிமையாளருக்கு சம்பந்தம் இல்லாத ஆதார் எண்கள் இணைக்கப்பட்டுள்ளதாகவும் மின்வாரியம் கண்டுபிடித்துள்ளது.
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(06.02.2023) – முழு விவரம் உள்ளே!!
இதுபோக, மின் கட்டணம் கட்டாததால் இன்று இரவே சம்பந்தப்பட்ட பயன்பாட்டாளர்களின் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என இணையதளங்களில் பரவி வரும் போலி வதந்தியை நம்ப வேண்டாம் என மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.