டாப் சீரியல்களில் ஒன்றாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இப்பொழுது எழிலுக்கு திருமணம் விமர்சையாக நடந்து வரும் நிலையில் தற்போது, அமிர்தா மண்டபத்திற்கு வந்து விடுகிறார். எழிலுக்கு அமிர்தாவை பார்த்ததும் பெரிய ஷாக். அமிர்தாவிற்கும் அதே நிலை தான்.
இப்படி இருக்க இப்பொழுது ப்ரோமோ வைரலாகி வருகிறது. அதாவது, அமிர்தாவிடம் நடந்த விஷயங்களை சொல்லி கெஞ்சி கொண்டிருக்கிறார் நம்ம எழில். பாட்டி காலில் விழுந்தது முதல், வீட்டை மீட்பது வரை நடந்த விஷயங்களை சொல்ல, அமிர்தா கண்கலங்கி நிற்கிறார். எழில் ஒரு கட்டத்தில் காலில் விழுந்து விடுகிறார்.
இதை அனைத்தையும் பாக்கியா தூரத்தில் இருந்து பார்த்து கொண்டுள்ளார். இந்த ப்ரோமோ பலரையும் கண்கலங்க வைத்துள்ளது. இப்படி இருக்க இப்பொழுது எழிலுக்கும், அமிர்தாவுக்கும் தான் திருமணம் நடக்குமாம். பாக்கியா தான் பட்ட கஷ்டத்தை எழில் படக்கூடாது என்று கல்யாணத்தை நிறுத்தி விடுவாராம். பல பிரச்சனைகளுக்கு நடுவில் தான் அமிர்தா-எழில் திருமணம் நடந்தேறுமாம்.