கோவாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து அம்மாநில சுற்றுலாத்துறை உத்தரவிட்டுள்ளது.
கட்டுப்பாடுகள் விதிப்பு
இந்தியாவில் உள்ள பரவலான மக்களால் விரும்பப்படும் சுற்றுலாத்தலம் என்றால் அது கோவாவாக தான் இருக்கும். இந்த சுற்றுலா தலத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் வருகை தருவது வழக்கம். அப்படி கோவாவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் முறையான பராமரிப்புகளை மேற்கொள்ளவில்லை என்பதை கவனித்த மாநில அரசாங்கம் ஒரு சில கட்டுப்பாடுகளை விதித்து புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
விரைவில் தாயாகும் சின்னத்திரை நடிகை நக்ஷத்திரா…,ரசிகர்கள் வாழ்த்து மழை…,
அந்த வகையில், கோவாவுக்கு வரும் பயணிகள் கடற்கரை உள்ளிட்ட பொது இடங்களில் மது அருந்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போல மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சமையல் செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகளை மீறும் நபர்கள் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் செலுத்தக்கூடும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால், கோவாவுக்கு வரும் நபர்கள் இந்த முறையான கட்டுப்பாடுகளை பின்பற்றும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.