இன்றைய காலகட்டத்தில் வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்ப்பது முக்கியத்துவமாக மாறிவருகிறது. பாதுகாப்பு காரணம் என்பது மாறி சமூக வலைத்தளங்களில் லைக் வாங்குவதற்காகவே எண்ணற்ற செல்லப்பிராணிகளை வளர்த்து வருகின்றனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதன்படி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள குடியிருப்புகளில் எண்ணற்ற நாய்கள் வளர்க்கப்படுவதால் அருகாமையில் உள்ளவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகின்றனர். இதனால் சமீப காலமாக இதுபோன்ற புகார்கள் மாநகராட்சியில் குவிந்து வருகிறது.
இதையடுத்து திருவனந்தபுரம் மாநகராட்சி அதிகாரி கூறுகையில் “ஒரு வீட்டில் 2 நாய்களுக்கு மேல் வளர்க்க கூடாது. அப்படி கூடுதலாக நாய்கள் வளர்க்கும் பட்சத்தில் ஆண்டுக்கு ரூ.1000, ரூ.750, ரூ.500 என செலுத்தி உரிய உரிமம் பெறும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டம் அரசின் ஒப்புதலுக்கு பிறகு நடைமுறைப்படுத்தப்படும்.” என்று கூறியுள்ளனர்.