இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் T20 போட்டி ராஞ்சியில் நேற்று நடைபெற்றது. ஏற்கனவே ஒரு நாள் தொடரை இழந்த நியூசிலாந்து அணி எழுச்சி பெறும் வகையில் நேற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் 21 ரன் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி 3 போட்டிகள் கொண்ட T20 தொடரில் 1-0 என நியூசிலாந்து அணி முன்னிலை வகிக்கிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
மேலும் இப்போட்டியில் நியூசிலாந்து அணி கேப்டன் கூறியது போல் பல வியூகங்களை பயன்படுத்தி இருந்தார். அதன்படி பவர் பிளேவின் கடைசி ஓவரை கேப்டன் மிட்செல் சான்ட்னர் வீசினார். இந்த ஓவரை T20 போட்டியின் ஜாம்பவானான இந்திய வீரர் சூர்யகுமார் எதிர்கொண்டார்.
எனக்கா எண்டு கார்டு போடுறீங்க.., எனக்கு எண்டே கிடையாது.., விஜய் டிவி கையாளும் பதிய ட்ரிக்!!
சர்வதேச பந்துவீச்சாளர்களை திணறடித்த சூர்யகுமார் சான்ட்னரின் சூழல் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினார். இதனால் அந்த ஓவர் மெய்டன் ஆனது. இதையடுத்து பெரும் எதிர்பார்ப்புடன் இருந்த இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. மேலும் இப்போட்டியில் நியூசிலாந்து அணி கேப்டன் மிட்செல் சான்ட்னரின் சிறப்பான ஆட்டம் பற்றி பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.