காலநிலை மாற்றத்தால் நாடு முழுவதும் அநேக இடங்களில் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (ஜனவரி 27) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மேலும் வங்கக்கடலில் கிழக்கு திசை காற்று மேற்கு நோக்கி வீசப்படவுள்ளது. இதனால் நாளையும் நாளை மறுநாளும் கடலோர மற்றும் அதையொட்டி உள்ள மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு., இல்லனா, அடுத்து இதான்! மின்வாரியம் உறுதி!!
மேலும் அடுத்த 3 நாட்களுக்கு தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசப்படவுள்ளது. இதனால் இந்த கடலோர பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.