புதுவையில் அரசு ஊழியர்கள் பாரம்பரிய உடை தினத்தை கடைபிடிக்கும் வகையில், மாதத்தில் முதல் நாள் இனி கதர் ஆடையில் வருகை தர வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
ஆளுநர் உத்தரவு:
புதுவை அரசு ஊழியர்களுக்கு, மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதாவது, இந்தியர்களின் பாரம்பரிய உடையான கதர் ஆடை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், நமது பாரம்பரிய தினத்தை கடைப்பிடிப்பதற்காகவும் அரசு ஊழியர்கள் மாதத்தின் முதல் நாளில் இனி கதர் ஆடை அணிந்து அலுவலகத்திற்கு வருகை தர வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
சமீப காலமாக புதுவையில், மின் துறை சார்ந்த பல்வேறு குழப்பங்கள் நீடித்து வருவதால், பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் அனைத்தையும் ஆய்வு செய்து 30 நாட்களுக்குள் அதற்கு தீர்வு காண வேண்டும் எனவும், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
“வாழ்க தமிழ்நாடு” – ஆவேசத்துடன் முழக்கமிட்ட ஆளுநர்! என்ன இப்படி டோட்டலா மாறிட்டீங்க!!
அரசு ஊழியர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் இது போன்ற, முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். ஆளுநரின் இந்த உத்தரவுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.