தாம்பரத்தில் 2012 ல் தனியார் பள்ளி பேருந்து ஓட்டையில் இருந்து விழுந்து மாணவி பலியான வழக்கில் கைதான 8 பேர் குறித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
8 பேர் விடுதலை:
தற்போதைய அவசர உலகத்தில் கணவன் மற்றும் மனைவி இருவரும் பணத்தை சம்பாதிப்பதில் மும்மரமாக இருந்து வருவதால் குழந்தைகளை பள்ளி வளாக பேருந்துகளில் அனுப்பி வைக்கின்றனர். ஒரு குழந்தைக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளி வளாகம் பேருந்துகளை முறைப்படி பராமரிக்காமல் இருந்து வருகின்றனர். இதனால் குழந்தைகள் இறக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. அந்த வகையில் கடந்த 2012ம் ஆண்டு தாம்பரம் அடுத்த சேலையூர் தனியார் பள்ளியின் பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக, சிறுமி சுருதி தவறி விழுந்து பலியானார்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
அதாவது தமிழ்நாடு மாநில நுகர்வோர் தீர்ப்பாயத்தில், முடிச்சூரை சேர்ந்த சேது மாதவன் என்பவரின் மகளான சுருதி வழக்கம் போல் பள்ளிக்கு பேருந்தில் சென்றுள்ளார். அந்த பேருந்தில் 6வது வரிசையில் மிகப்பெரிய ஓட்டை இருந்த நிலையில் ஒரு பலகையை போட்டு மறைத்துள்ளனர். 6வது சீட்டில் அமர்ந்திருந்த அந்த குழந்தை ஓட்டை வழியாக சாலையில் விழுந்து பின்னாடி இருக்கும் சக்கரத்தில் சிக்கி உயிர் இறந்தார்.
வாரே வா., வாகன ஓட்டிகளுக்கு ஜாக்பாட்.., மத்திய பட்ஜெட் 2023ல் குவிய போகும் அறிவிப்புகள்!
இதை தொடர்ந்து சிறுமியின் தந்தை வழக்கு தொடர பள்ளி தாளாளர், மோட்டார் வாகன ஆய்வாளர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்ந்து 10 வருடங்கள் நடந்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்குக்கு இறுதி தீர்ப்பை நீதிமன்றம் கொடுத்துள்ளது. அதாவது பேருந்தில் சிறுமி இறந்த நிலையில் கைது செய்யப்பட்ட 8 பேரை விடுதலை செய்து செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி காயத்ரி தீர்ப்பு வழங்கினார்.