அரசு பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை மத்திய மாநில அரசுகள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு பள்ளிகளில் மதிய உணவு திட்டத்துடன் காலை உணவு திட்டத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு வழங்கி வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
மேலும் பொது தேர்வுக்காக சிறப்பு வகுப்புகள் பயிலும் மாணவர்களுக்கு பயறு வகைகளை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வழங்கி வருகிறது. இதைத்தொடர்ந்து இப்போது அக்ரோ ஜீ ஆர்கானிக் புத்தாக்க நிறுவனமானது சிறு குறு விவசாயிகளிடம் சிறுதானிய வகைகளை பெற்று விற்பனை செய்து வருகிறது.
இந்நிறுவனம் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு சத்துணவுடன் இலவசமாக திணை வகைகளை வழங்க முடிவு செய்துள்ளது. இதற்கு முதற்கட்டமாக புரந்தரா தாலுகாவில் உள்ள 7 அரசு பள்ளிகளில் வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.