இந்த ஸ்மார்ட் உலகில் மக்களின் அத்தியாவசிய தேவையாக ஸ்மார்ட் போன்கள் பெருகி வருகிறது. இதனால் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர நாளுக்கு நாள் புதிய அப்டேட்கள் கொண்ட ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் தெரிவித்து வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் உலக அளவில் வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பு “ஆப்பிள் ஐபோன்”க்கு எப்போதும் உண்டு. எனவே இந்நிறுவனம் உலகெங்கும் கிளைகள் அமைத்து செல்போன்களை தயாரித்து வருகிறது. இவ்வாறு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்கள் கடந்த டிசம்பர் மாதம் ரூ.10,000 கோடிக்கு மேல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
இதில் ஆப்பிள் ஐபோன் மட்டும் முதல் முறையாக ரூ.8100 கோடிக்கு ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளது. இதனால் எதிர் காலங்களில் உலக அளவில் பயன்படுத்தப்படும் ஆப்பிள் ஐபோன்களில் பாதியளவு இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாக இருக்கும் என கூறப்படுகிறது.