கஞ்சா, ஹெராயின், போதை மாத்திரை போன்ற போதை பொருட்களின் புழக்கம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிகரித்து வருகிறது. பள்ளி மாணவர்கள் மேய்த்தல் பெரியவர்கள் வரை போதை பொருளுக்கு அடிமையாகி வருவதால் திருட்டு, கொலை, கொள்ளை போன்ற சட்டவிரோத செயல்களால் பொதுமக்கள் அனுதினமும் பாதிப்படைந்து வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதனால் போதை பொருள் விற்பனை மற்றும் உட்கொள்பவர்களை கண்டறிய பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு காவல்துறை மேற்கொண்டு வருகிறது. இதைத்தொடர்ந்து போதை பொருள் விற்பவர்களை எச்சரிக்கும் விதமாக தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை வித்தியாசமான விளம்பரத்தை பிரபலப்படுத்தியுள்ளனர்.
அதாவது தற்போதைய ட்ரென்டிங்க்கு ஏற்ப “வாரிசு” பட தயாரிப்பாளர் கூறியது போல “கேஸ் வேணுமா கேஸ் இருக்கு, ஜெயில் வேணுமா ஜெயில் இருக்கு, வங்கி கணக்கு முடக்கணுமா அதுவும் இருக்கு” என செம்மையாக கலாய்த்து எச்சரித்துள்ளனர். மேலும் #saynotodrugs, #enakuvendam போன்ற ஹேஸ்டேக்கும் இணையதளங்களில் வெகுவாக பரவி வருகிறது.