ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில், பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் சானியா மிர்சாவின் ஜோடி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்:
2023 ம் ஆண்டின் முதல் ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் கடந்த 16ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், இந்தியாவின் முன்னணி வீராங்கனையான சானியா மிர்சா, கஜகஸ்தானின் அன்னா டானிலினாவுடன் இணைந்து பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் பங்கு பெற்றுள்ளார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
சானியா மிர்சா, அடுத்ததாக துபாயில் நடைபெற உள்ள ஓபன் டென்னிஸ் தொடரில் விளையாடிய பிறகு, தனது ஓய்வினை அறிவிக்க உள்ளதாக கூறியிருந்தார். இதனால், இவரது ஆட்டத்தின் மீது அதிக எதிர்பார்ப்புகள் இருந்து வந்தன. ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் இன்று இவர், பெண்களுக்கான இரட்டையர் பிரிவில், ஹங்கேரியாவின் டால்மா கல்ஃபி மற்றும் அமெரிக்காவின் பெர்னார்டா பேரா எதிர்த்துப் போட்டியிட்டார்.
இந்த போட்டியின், முதல் இரு செட்டை 6-2, 7-5 என்ற புள்ளி கணக்கில் சானியா மிர்சா மற்றும் அன்னா டானிலினா ஜோடி கைப்பற்றியது. இதனால், ஆஸ்திரேலிய ஓபனின் முதல் சுற்றில் சானியா மிர்சா மற்றும் அன்னா டானிலினா ஜோடி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.