வைகைப்புயல் நடித்த நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் தோல்வி குறித்து அவர் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்:
தென்னிந்திய தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேல் நகைச்சுவை நடிகராக கொடி கட்டி பறப்பவர் தான் நடிகர் வடிவேலு. இவர் ரஜினி, கமல், விஜயகாந்த், அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பட்டையை கிளப்பி இருப்பார். இப்படி நன்றாக நடித்து வந்த வடிவேலு, இம்சை அரசன் 24ம் புலிகேசி படப்பிடிப்பில் ஏற்பட்ட பிரச்சனையால் அவருக்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு கொடுத்திருந்தது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இதனால் 10 வருடங்களுக்கு மேல் நடிக்காமல் இருந்த வடிவேலு சுராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் திரும்பவும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். இப்படம் கடந்த டிசம்பர் 9ம் தேதி வெளியாகி விமர்சன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மண்ணை கவ்வியது. ஆனால் ஒரு சில திரையரங்குகளில் படம் ஓடிக்கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் இப்படம் தோல்வி அடைந்ததற்கான காரணம் குறித்து வடிவேலு விளக்கமளித்துள்ளார்.
ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்று இயக்குனர் மிஷ்கின் செய்த காரியம்., ஷாக் ஆகி போன பட குழுவினர்
அதாவது அவர் கூறியதாவது, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றியால் தயாரிப்பாளர் சந்தோஷமாக இருக்கிறார். மேலும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் தோல்விக்கு முக்கிய காரணம் படத்தை குறித்து யூடியூப்பில் வந்த நெகட்டிவ் விமர்சனங்கள் தான்’ என்றும் தெரிவித்துள்ளார்.