இந்தியா வருங்காலத்தில் விபத்தில்லா நாடாக திகழ பல்வேறு திட்டங்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் அமல்படுத்தி வருகின்றனர். இதைத்தொடர்ந்து சாலை விரிவாக்கம், பராமரிப்பு, மேம்பாலம் அமைத்தல் போன்ற திட்டம் தொடர்பாக பெங்களூருவில் நடந்த அனைத்து மாநில போக்குவரத்து துறை அமைச்சர்கள் மாநாட்டில் தமிழக நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதையடுத்து தேசிய மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மாநில தேசிய நெடுஞ்சாலைகளில் சென்னை ஈ.சி.ஆர். ரோட்டை விரிவாக்கம் செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மாநிலங்களை இணைக்கும் முக்கிய நகரங்களுக்கு இடையே சரக்குகளை எடுத்துச் செல்லவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், மற்றும் விபத்துக்களை தடுக்கவும் 11 மீட்டர் அகலத்தில் 6 வழிச்சாலை திட்டத்தை வெளியிட்டுள்ளது.
தமிழக கோயில்களில் இதற்கு தடை., புனிதம் கெடுவதாக வேதனை! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
அந்த வகையில் இந்த திட்டத்தின் படி புதுச்சேரி to மாமல்லபுரம் சாலையை நான்கு வழித்தடமாக மேம்படுத்த ரூ.1834 கோடியும், புதுச்சேரி to நாகப்பட்டினம் சாலையை நான்கு வழித்தடமாக மேம்படுத்த ரூ.6845 கோடியும்,நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தேசிய மாநில நெடுஞ்சாலைத் துறை கூறியுள்ளது.