தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் செல்போன் பயன்படுத்த தடை விதிப்பதாக, உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
அதிரடி உத்தரவு:
தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நிகழ்ந்து வந்த, அனைத்து விழாக்களும் தற்போது பக்தர்கள் வெள்ளத்தில் வழக்கம் போல் நடந்து வருகிறது. இந்த நிலையில், தற்போது ஒரு சில கோயில்களில், கோவிலுக்குள் செல்போன் பயன்படுத்த கோவில் நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இது குறித்த வழக்கு ஒன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடந்து வந்தது. தற்போது இந்த வழக்கில், உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் செல்போன் பயன்படுத்த தடை விதிப்பதாகவும், இதுகுறித்த ஆணையை இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு உடனே அனுப்ப வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
எல்லாத்துக்கும் காரணம் நீ தானா?? பாவம் காவியா.., பார்வதியை நொறுக்கிய பார்த்திபன்!!
கோயிலுக்குள் செல்போன் பயன்படுத்துவதால் அதன் புனிதம் மற்றும் தூய்மை கெட்டுப் போவதாகவும், அதனைக் காக்க இந்த செல்போன் தடை அறிவித்து இருப்பதாகவும் உயர்நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.