விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 6” நிகழ்ச்சி தொடங்கப்பட்டு 40 நாட்களை கடந்துவிட்டது. இந்நிலையில் இன்றைய எபிசோடில் ADK மற்றும் அசிம் இடையே பயங்கர சண்டை வருகிறது. அதில் ADK கோவப்பட பயங்கரமாக சத்தம் போட்டு டாஸ்க் செய்யமாட்டேன் என சொல்கிறார்.
ப்ரோமோ:
பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த மாதம் 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட நிலையில், தற்போது விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. இந்த சீசன் தொடங்கியது முதல் சண்டைக்கு குறைவு இல்லாமல் இருக்கிறது. ஒரு வாரம் நண்பர்களாக இருப்பவர்கள் அடுத்த வாரம் சண்டை போட்டுக் கொள்கின்றனர். ஆனால் மறுவாரமே அவர்கள் மீண்டும் இணைந்து பேச தொடங்கிவிடுகின்றனர். அந்த வகையில் இதுவரை 40 நாட்களாக நண்பர்களாக இருந்த ADK மற்றும் அசிம் தற்போது சண்டையிட்டு கொள்கின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதாவது ராஜா ராணி டாஸ்க் நடந்து வரும் நிலையில், அசிம் சொல்லும் கருத்துக்களை யாரும் கேட்பதாக இல்லை, இது குறித்து நேற்றே சண்டை வந்தது. அது இன்றைய எபிசோடிலும் தொடர்ந்து வருகிறது. அசிம் மனிதாபிமானம் இல்லாமல் ஒருவரது காலில் பூட்டு போடுவது சரி இல்லை என ADKவை பார்த்து சொல்கிறார். உடனே ADK என்ன மனிதாபிமானம் இல்லை நான் என்னுடைய வேலையை மட்டும் தான் பார்க்கிறேன் என சொல்கிறார்.
உடனே அசிம் வேலையை பார்த்தால் ஏன் தப்பி ஓட போகிறார் என கேட்க, கிழித்தது போதும் தளபதி என ADK சத்தமாக பேசுகிறார். உடனே அசிம் ஒரு சாவியை பாதுகாக்க முடியவில்லை என கேட்க, கவன குறைவு என அசிம் சொல்கிறார். உடனே கோவப்பட்ட ADK அவன் அவன் உயிரை கொடுத்து வேலை பார்க்கிறான் என சொல்லி சட்டையை கழட்டி எறிகிறார். பின் உன்னை போல் ஒருவருடன் நான் பேசுவதை அசிங்கமாக நினைக்கிறன் என ADK சொல்கிறார். உடனே அசிம் நீ ஏன் கத்துகிறாய் பிதற்றுகிறாய் என கேட்க, போயா என சொல்லிவிட்டு ADK செல்வது போல ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.