நடிகர் மகேஷ்பாபுவின் தந்தையும், தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாருமான கிருஷ்ணா மாரடைப்பு காரணமாக, இன்று அதிகாலை திடீரென உயிரிழந்தார்.
திடீர் மறைவு:
தெலுங்கு திரை உலகின் முன்னணி நாயகராக வலம் வருபவர் நடிகர் மகேஷ்பாபு. இவர் நடிப்பில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களும், தெலுங்கு திரையுலகில் பெரிய அளவில் பேசப்பட்டு வந்தது. தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு என்றால் அது மிகையாகாது. இந்த நிலையில் மகேஷ் பாபுவின் தாய் இந்திரா தேவி, கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
தாயின் மறைவு நடிகர் மகேஷ்பாபுவை நிலை குலைய செய்தது. தற்போது இது நடந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. அதற்குள் அவரது தந்தையும், தெலுங்கு திரையின் முன்னணி நடிகருமான கிருஷ்ணா மாரடைப்பு ஏற்பட்டு இன்று அதிகாலை உயிரிழந்தார். தெலுங்கு திரையுலகில் 350 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர், நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமையுடன் விளங்கியுள்ளார்.
மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை உயிரிழந்தார். தாய் இறந்த கொஞ்ச நாளிலேயே தந்தையை இழந்த மகேஷ் பாபு, செய்வதறியாது திகைத்துப் போய் உள்ளார். தற்போது திரையுலகினர் பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.