தமிழகத்தில் உள்ள முக்கிய மாவட்டத்தில் கனமழை வெளுத்து வாங்கி வருவதால் பள்ளி/கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பள்ளி விடுமுறை:
தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவ மழை ஆரம்பித்தது. தற்போது வரை கடலோர பகுதிகளும், தென் மேற்கு பகுதிகளிலும் அடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. பொதுவாக காலையில் சுட்டெரிக்கும் வெயிலுடன் ஆரம்பித்து, நேரம் போக போக கனமழை பெய்து வருவது வழக்கமாக நடக்கிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
ஆனால் கடந்த இரு தினங்களாக இரவு தொடங்கிய மழை மறுநாள் வரை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் சென்னை வானிலை மையம் நேற்றும், இன்றும் தமிழகத்தில் ரெட் அலர்ட் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பள்ளி/கல்லூரி குறித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
உடலை வில்லாக வளைத்த 14 வயது சிறுமி.,,கின்னஸ் உலக சாதனை நிகழ்ச்சியில் அசத்தல்!!
அதாவது தமிழகத்தில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனமழை தொடர்ந்து விடாமல் பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சாலை வீதிகளில் மழைநீர் தேங்கி நிற்பதால், பொதுமக்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். இதை கருத்தில் கொண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நவம்பர் 12ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.