TNPSC குரூப்1 முதல்நிலைத் தேர்வுக்கு தயாராகி வரும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தேர்வர்களுக்கு இலவச மாதிரி தேர்வு நடத்த உள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
TNPSC குரூப்-1:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 1 பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை கடந்த ஜூலை மாதம் வெளியிட்ட நிலையில், குரூப் 1 முதல் கட்ட தேர்வு வரும் நவம்பர் 19ம் தேதி நடைபெற உள்ளது. மேலும் இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் நேற்றுதான் tnpsc அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியானது. இந்நிலையில் தேர்வுக்கு தயாராகி வரும் தேர்வர்களுக்கு உதவும் நோக்கில் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதில், குரூப் 1 தேர்வுக்கு தயாராகும் வரும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தேர்வர்களுக்கு இலவச மாதிரித் தேர்வு வரும் 13ம் தேதி நடைபெற உள்ளது. மேலும் சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த இலவச மாதிரித் தேர்வு, ஏற்காடு அடிவாரம் பகுதியில் அமைந்துள்ள விநாயகா மிஷன் மருந்தியல் கல்லூரியில் நடைபெறும் என கூறியுள்ளார்.
மேலும் இந்த மாதிரி தேர்வை எழுத ஆர்வம் உள்ளவர்கள், குரூப் 1 தேர்வுக்கு அப்ளை செய்த xerox, 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன் வர வேண்டும். மேலும் காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை இந்த மாதிரி தேர்வு நடைபெறும். இது குறித்த விரிவான விவரங்களுக்கு 9490055941 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.