அடுத்த வருடம் நடைபெற இருக்கும் மகளிருக்கான டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன், இந்திய அணி தென் ஆப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கு எதிராக முத்தரப்பு தொடரில் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய மகளிர் அணி:
ஐசிசி சார்பாக மகளிருக்கான டி20 உலக கோப்பை தொடரின் 8வது சீசன் அடுத்த வருடம் பிப்ரவரி 10ம் தேதி முதல் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற உள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், அயர்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் இந்த உலக கோப்பை தொடரில் பங்கு பெற உள்ளன. இந்த 10 அணிகள் இரு குரூப்களின் கீழ் தலா 5 அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
அடுத்த யுத்தத்திற்கு தயாராகும் தமிழ்நாடு அணி…, மீண்டும் சாம்பியன் ஆகுமா? எகிறும் எதிர்பார்ப்புகள்!!
இதில், இந்திய மகளிர் அணியானது, குரூப் B யில் இங்கிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து, மேற்கிந்திய தீவுகள் அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை பிப்ரவரி 12ம் தேதி எதிர்கொள்ள இருக்கிறது. கடந்த ஆசிய கோப்பையில், பாகிஸ்தானுக்கு எதிராக தோல்வியை சந்தித்த இந்திய அணி உலக கோப்பையில் பழி தீர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
இந்த உலக கோப்பைக்கு முன் இந்திய மகளிர் அணி, தென் ஆப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கு எதிராக முத்தரப்பு தொடரை அடுத்த வருடம் ஜனவரி 19ம் தேதி முதல் தென் ஆப்பிரிக்காவுக்கு சென்று விளையாட உள்ளது. இதில், இந்தியா அணியானது, ஜனவரி 19 மற்றும் 28 ல் தென் ஆப்பிரிக்காவையும். ஜனவரி 23 மற்றும் 30 ல் மேற்கிந்திய தீவுகள் அணியையும் எதிர்கொள்ள இருக்கிறது. இந்த 4 போட்டிகளின் வெற்றி தோல்வி அடிப்படையில், பிப்ரவரி 2ம் தேதி இறுதி போட்டி நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.