தமிழகத்தில், நவம்பர் 10, 11 ஆகிய தேதிகளில் அதீத கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுபோக, இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.
மழை எச்சரிக்கை :
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தொடங்கி வெளுத்து வாங்கி வருகிறது. மழை காரணமாக பல இடங்களில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் வாழ்வாதாரம் முடங்கியுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த நிலையில், வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதால், தமிழகத்தில் நாளையும் நாளை மறுநாளும் அதிக கன மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக் கூடும் என்பதால், இப்போதைக்கு அதன் தன்மையை கணிக்க இயலாது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(09.11.2022) – முழு விவரம் உள்ளே!!
அதேபோல, தமிழகத்தில் இன்று சென்னை, செங்கல்பட்டு, மயிலாடுதுறை, கடலூர்,விழுப்புரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.