மாநிலம் முழுவதும் உள்ள குறிப்பிட்ட இந்த தொழிலாளர்களுக்கு மட்டும் ரூபாய் 5000 நிதி உதவி வழங்க தொழில்துறை அமைச்சருக்கு உத்தரவிட்டிருப்பதாக முதல்வர் அறிவித்துள்ளார்.
முதல்வர் அறிவிப்பு :
வறட்சி மற்றும் வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் பாதிக்கப்படும் மக்களுக்கு அரசின் சார்பாக நிதியுதவி வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நம் நாட்டின் தலைநகரான டெல்லியில் சமீப மாதங்களாக காற்று மாசு கட்டுக்கடங்காமல் இருந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு தான் கடந்த தீபாவளி பண்டிகையின் போது கூட பட்டாசு வெடிக்க பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்த நிலையில், டெல்லி மாநில காற்று தர மேலாண்மை ஆணையம், காற்று மாசு நடவடிக்கை காரணமாக மாநிலம் முழுவதும் உள்ள கட்டுமான நடவடிக்கைகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. ஆணையத்தின் இந்த நடவடிக்கையால், கட்டுமான பணிகள் முழுவதும் தடை பட்டுள்ளது.
பள்ளி வளாகத்தில் மது அருந்திய ஆசிரியர்.,, வைரல் வீடியோ!! அதிரடி காட்டிய கல்வி அதிகாரி!!
இதுபோன்ற காலத்தில் கட்டுமான பணியாளர்களுக்கு ஏற்படும் இழப்பை சரி செய்ய, அவர்களுக்கு ரூபாய் 5000 நிதியுதவி வழங்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். பணியாளர்களுக்கான இந்த நிதி உதவி குறித்து டெல்லி மாநில தொழில்துறை அமைச்சர் மனிஷ் சிசோடியாவுக்கு தான் உத்தரவிட்டிருப்பதாக தெரிவித்தார். மாநில முதல்வரின் இந்த நடவடிக்கைக்கு, சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.