தமிழகத்தில் 234 சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகங்களில், இதுவரை இல்லாத சூப்பர் வசதியை ஸ்டாலின் கொண்டு வந்துள்ளார். இதனால் மக்கள் கோரிக்கை, நிமிடத்தில் பரிசீலனை செய்யப்பட உள்ளது.
சூப்பர் வசதி:
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில், பல புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு வருகிறார். பள்ளி கட்டமைப்பு வசதி, போக்குவரத்து துறையில் சில புதிய முடிவுகள், சாலை விரிவாக்கம் போன்ற அதிரடி அறிவிப்புகளை, வழங்கி வருகிறார். இந்த நிலையில் சமீப காலமாக, தமிழகத்தில் உள்ள அனைத்து துறைகளும் கணினி மயமாக்கப்பட்டு வருகிறது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
சமீபத்தில் பத்திரப்பதிவுத்துறை, அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகங்களான, எம் எல் ஏ அலுவலகங்களில் இ சேவை மையங்களை ஸ்டாலின் தொடங்கியுள்ளார். முதல் கட்டமாக, இந்த இ சேவை மையங்களுக்கு நவீன மேசை, கணினிகள் போன்ற உபகரணங்களை 10 எம்எல்ஏக்களுக்கு முதல்வர் வழங்கினார்.
தமிழக பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட் – முதல்வர் போட்ட உத்தரவு! அமைச்சர் அன்பில் மகேஷ் மகிழ்ச்சி!!
இந்த, நவீன மயமாக்கப்பட்ட இ சேவை மையம் மூலம் , எம்எல்ஏ அலுவலகங்களுக்கு வரும் கோரிக்கைகள் இனி நிமிடத்தில் பரிசீலனை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இதில் தொய்வு என்ற பேச்சுக்கே, இனி இடமில்லை என்பது அரசியல் வட்டாரத்தினரின் கருத்தாக உள்ளது.